Sunday 22 November 2020

எம்.ஜி.ஆரின் முதல் படம்








இந்தியா திரை உலகில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் சாதித்த சாதனைகள் ஏராளம் அவரது திரைப்படங்கள் பதித்த வெற்றிகள் ஏராளம்! அவர் கொண்டு வந்த திரைப்படங்கள் மூலம் வரலாறு படைத்து வசூலை உருவாக்கிய காவியங்கள் ஏராளம்! இப்படி ஏராளமான திரைப்படங்கள் மூலம் தன்னுடைய கருத்துக்கள் மூலம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய வெற்றி காவியங்களை திரைஉலகில் வெள்ளித்திரையில் பதித்துள்ளார். அந்த சாதனைகளில் சிலவற்றை இப்பொழுது பட்டியலிட்டு காண்போம்.

இதோ புரட்சித்தலைவரின் சாதனைப் பட்டியல்!

சுதந்திர இந்தியாவின் முதல் வெற்றி கதாநாயகன் புரட்சி நடிகர் எம். ஜி. ஆர். திரைப்படம் 1947ம் ஆண்டு வெளிவந்த ராஜகுமாரி திரைப்படத்தில் முதன் முறையாக கதாநாயகன் கதாபாத்திரத்தில் வலம் வந்து திரை உலகில் வெற்றி வாகை சூடினார்.

பாடத் தெரிந்தவர்கள் தான் கதாநாயகனாக நடிக்க முடியும் என்ற தீர்மானத்தை உடைத்தெறிந்து பாடதெரியாதவர்களும் கதாநாயகனாக திரையுலகில் சாதிக்க முடியும் என்ற கொள்கை மூலம் திரையில் தோன்றி…. தான் நடித்த முதல் படமான ராஜகுமாரியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மூலம் பாட தெரியாதவர்களும் கதாநாயகனாக வலம் வர முடியும் என்பதை இத்திரைப்படம் மூலம் நிரூபித்து காண்பித்தார்-


புரட்சி நடிகரின் ராஜகுமாரி திரைப்படம் 1947ம் ஆண்டு மே மாதத்தில் வெளிவந்தது. சென்னை நகரின் மையப்பகுதியான திருவல்லிக்கேணி ஸ்டார் திரையரங்குகளிலும் பின்பு ராக்ஸி, பிராட்வே திரையரங்குகளில் இத்திரைப்படம் வெள்ளித்திரையில் பதிவானது.


ராஜகுமாரி திரைப்படம் மதுரை சிந்தாமணி திரையரங்கில் வெளியிடப்பட்டு 100 நாட்களை கடந்தும் திருச்சி சேலம் கோவை வேலூர் நெல்லை பெங்களூர் நகரங்களில் வெற்றி வாகை சூடி 100 நாட்களை கடந்தது.




புரட்சி நடிகர் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி வெற்றியை தொடர்ந்து ஜூபிடர் நிறுவனம் மக்கள் திலகத்தை வைத்து தொடர்ந்து.... மோகினி அபிமன்யு படங்களை தயாரித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

1947 ஆம் ஆண்டு வெளியான ராஜகுமாரிக்கு பின் பைத்தியக்காரன் என்ற திரைப்படம் என் எஸ் கே அவர்கள் தயாரிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்டது.

1948ஆம் ஆண்டு மோகினி திரைப்படத்தில் மக்கள் திலகத்தின் கதாநாயகியாக நடித்தவர் வி. என். ஜானகி அவர்கள். பின்னாளில் அவரே மக்கள் திலகத்தின் துணைவியாக அமைந்தார்.

முதல் ஜோடியாக மக்கள் திலகம் எம்ஜிஆர் மாலதி ஆகியோரும்.... பைத்தியக்காரன் படத்தில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு டி.எம்.மதுரம் அவர்கள் ஜோடியாகவும்..... மோகினி திரைப்படத்தில் எம்ஜிஆர் அவர்களுக்கு மீண்டும் வி.என். ஜானகி அவர்கள் கதாநாயகியாக நடித்தனர்.

டூயட் பாடல்கள் பல..... அதனை தொடர்ந்து 1948ல் வெளிவந்த ஜெமினியின் சந்திரலேகா, ஏவி.எம்மின் வேதாள உலகம், மாடர்ன் தியேட்டர்ஸின் ஆதித்தன் கனவு ஆகிய படங்கள் வந்தாலும் மோகினி அபிமன்யு இரண்டு படங்களும் வெற்றியை தந்தது.கிய படங்கள் வந்தாலும் மோகினி அபிமன்யு இரண்டு படங்களும் வெற்றியை தந்தது.
  
உரிமைக்குரல் பி.எஸ் ராஜு  

Wednesday 18 November 2020

எம்.ஜி.ஆரின் திரைப்படங்களின் வெற்றி விழா !!

 



விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்த மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் எங்க வீட்டு பிள்ளை திரைப்படம் ஆகும். 
14.01.1965 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளியாகி சென்னை மட்டுமல்லாது தென்னக மெங்கும் மிகப்பெரிய வெற்றியைப் பதித்தது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் இரு வேடங்களில் பவனி வந்து சிறந்த நடிப்புக்கு மகுடம் சூட்டினார்.
மிகப் பிரம்மாண்டமான வசூலை ஏற்படுத்தி பல திரையரங்குகளில் வெளிவந்து வெற்றிநடை போட்டது.
எங்க வீட்டு பிள்ளை திரைப்படம். 

சென்னை நகரில் எம் ஜி ஆர் பிக்சர்ஸ் சார்பாக இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. இக்காவியத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியை எம் ஜி ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை காசினோ திரையரங்கில் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் வெள்ளி விழா நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

பேரறிஞர் அண்ணா அவர்கள் திரைப்பட கலைஞர்களுக்கு கேடயம் வழங்கி புரட்சி நடிகர் 
எம் ஜி ஆர் அவர்களின் நடிப்புக்கு புகழாரம் சூட்டினார்கள்.
மேலும் சென்னை பிராட்வே மேகலா திரையரங்குகளில் இக்காவியத்தின் வெள்ளி விழா சீறும் சிறப்புடன் நடைபெற்றது. 

சென்னை நகரில் எம் ஜி ஆர் பிக்சர்ஸ் சார்பில் திரையிடப்பட்ட இக்காவியம் 175 நாட்களில் 13 லட்சத்திற்கும் மேல் வசூலை அன்னாளில் வசூலாக அள்ளிக்கொடுத்து இக்காவியத்தின் சிறப்பை... வெற்றியை பதிய வைத்தது. 





சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.யார் பிக்சர்ஸின் முதல் தயாரிப்பான நாடோடி மன்னன் திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை ஐ.ஏ.ஏ.எஸ் திடலில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் சிறப்புடன்நடைபெற்றது.

நாடோடிமன்னன் திரைப்படத்தின் வெற்றி விழா சீரும் சிறப்புடனும் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
திரைப்படத்தில் பங்கு கொண்ட அத்தனை திரைப்பட கலைஞர்களும் தங்க மோதிரம் மற்றும் கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்ட முதல் திரைப்படம் நாடோடி மன்னன் ஆகும்.

புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் இருவேடங்களில் நடித்து, தயாரித்து, இயக்கிய மாபெரும் வெற்றி படைப்பு... இந்திய திரை உலகின் உன்னத தயாரிப்பாக நாடோடி மன்னன்
திகழ்ந்தது. 


     - உரிமைக்குரல் பி.எஸ் ராஜு  








#mgr #mgramachandran #puratchithalaivar #makkalthilagam  

#எம்ஜிஆர்  #எம்ஜிராமச்சந்திரன்  #மக்கள்திலகம் 
#புரட்சித்தலைவர்  #எங்கவீட்டுப்பிள்ளை   #நாடோடிமன்னன் #பேரறிஞர்அண்ணா   #விஜயாவாஹினி

Tuesday 17 November 2020

கொரோனா காலத்திலும் கொள்கை தங்கம் எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் திரையீடு !!




கடந்த 2019 டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள யூகான் மாநிலத்தில் தொடங்கிய ஆட்கொல்லி நோயானா (கோவிட் 19) கொராணா….

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் உலக நாடுகளை ஆட்கொண்டது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொராணாவின் தாக்கம் அதிக வீரியம் கொண்டது.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை கிட்டத்தட்ட ஐந்து கோடிக்கும் மேற்பட்ட மக்களை இந்நோய் பாதித்தது.தொற்று நோயாக தொடர்ந்தது…. கிட்டதட்ட 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியானார்கள். 

இந்தியாவிலும் கொராணா தாக்கம் மிகப்பெரிய வீரியம் அடைந்தது. குறிப்பாக நமது தமிழகத்திலும் பல மாதங்கள்  ஊரடங்கு தொடர்ந்தது.

பள்ளிகள் , கல்லூரி, பலநிர்வனங்கள், திரைத்தொழில், வர்த்தகம் என பல துறைகள் வாழ்வாதாரம் இழந்தது.

அரசு எடுத்த முடிவுகளின் படி… தளர்வுகள்  படிப்படியாக தளர்த்தப்பட்டது. இருந்த போதும் நவம்பர் மாதம் முதல் கிட்டதட்ட 

90 சதவீகித தளர்வுகளில்…

குறிப்பாக 8 மாதங்கள் மூடப்பட்ட திரையரங்குகளை நவம்பர் 10 ம் தேதி முதல் திறக்கலாம் என்று அரசு அறிவித்தது.

தீபாவளி முன்பு திரையரங்குகள் திறக்கப்பட்டது என்றாலும்… குறிப்பிட்ட சில திரையரங்குகள் மட்டுமே  திறக்கபட்டது. திரையரங்குகளில்  ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்டது.

இந்த தீபாவளி திருநாளில் பல நடிகர்களின் படங்கள் மத்தியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்களே மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சை, தூத்துக்குடி இவ்வூர்களில் அதிகம் திரையிடபட்டது.


ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் 

10க்கும் மேற்பட்ட ஊர்களில் வெளியானது.





தீபாவளி திருநாளில் மதுரையில் சென்ட்ரல் திரையரங்கில் 

தர்மம் தலைக்காக்கும்…  



அரவிந்து திரையரங்கில் 



எங்க வீட்டுப்பிள்ள என இரண்டு திரைப்படங்கள் வெளியிடப்பட்டு சாதனையை ஏற்படுத்தியது.


அதேபோல் 

கோவையில் மக்கள் திலகத்தின் 

தாய்க்குத் தலைமகன் டிலைட் அரங்கில் திரைப்படமும் தொடர்ந்து தேடிவந்த மாப்பிள்ளை திரைப்படமும் திரையிடப்பட்டது.

சண்முகா திரையரங்கில் காவல்காரன் திரைப்படம் தீபாவளி திருநாளில் வெளிவந்தது. 


சேலம் நகரில்…









அலங்கார் திரையரங்கில் நம் நாடு திரைப்படமும் …தூத்துக்குடியில் சத்யம் திரையரங்கில் மக்கள் திலகத்தின் சிரித்து வாழவேண்டும் திரைப்படமும், திருச்சி நகரில் முருகன் திரையரங்கில் ரகசிய போலீஸ் 115 திரைப்படமும் தீபாவளி தினத்தில் வெளிவந்து வெற்றி கண்டது.




எத்தனையோ நடிகர்கள் நடித்த பல படங்கள் இருந்த போதிலும்  மக்கள் திலகத்தின் காவியங்களே தீபாவளி திருநாளில்….. கொராணா காலத்தில்….. திரையரங்குக்கு வந்துள்ளது. 

மக்களும் மக்கள் திலகத்தின் திரைப்படங்களை பார்த்து மகிழ்ந்தார்கள் என்றால்…. காலத்தை கடந்தும் சாதனையை பதிப்பவர் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் மட்டுமே என்பது ஒரு வெற்றி முழக்கமாகும். 


இன்றும்  திரையரங்குகளுக்கு வாழ்வாதாரம் கொடுப்பவர் மக்கள் திலகத்தின் காவியங்கள் மட்டுமே முன் உதாரணமாக திகழ்கின்றார்.

எக்காலத்திலும், எப்பொழுதும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்கள் தான் மக்களுக்கு ஏற்ற திரைப்படங்களாக மக்களை மகிழ்வித்து…. எழுச்சியை உண்டாக்கும் திரைக் காவியங்களாக  தொடர்ந்து பவனி வருகிறது. கடந்த 8 மாதங்களாக திரை அரங்குகள் மூடப்பட்ட போதிலும் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும் மக்கள் திலகத்தின் காவியங்கள் இப்படி தொடர்ந்து வெளிவருவது மிகப்பெரிய ஒரு சாதனையாகவும்…. 

மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் சந்தோஷமாகவும் திகழ்கின்றது.


                                                                     - உரிமைக்குரல் பி.எஸ் ராஜு  









#mgr #mgramachandran #puratchithalaivar #makkalthilagam  

#எம்ஜிஆர்  #எம்ஜிராமச்சந்திரன்  #மக்கள்திலகம் 
#புரட்சித்தலைவர்  #எங்கவீட்டுப்பிள்ளை   #நாடோடிமன்னன் #பேரறிஞர்அண்ணா   #விஜயாவாஹினி